Friday, January 22, 2010

சாசனம்




நெஞ்சினிலே நினைத்து விட்டேன்,

நினைவெல்லாம் நீயே என்று!

நேசமுடன் வளர்ந்து விட்டேன்,

பாசமெல்லாம் நீயே என்று!


பார்வை வேண்டும் தருவாயா,

பாவை உன்னை காண்பதற்கு!

பறவையாக மாற்றி விடு - எனையுன்

படுக்கை அறையில் மாட்டி விடு!


இச்சை உன் மீது கொண்ட

பச்சிளம் பாலகன் நான்,

சர்ச்சை வேண்டாம் கண்ணே!

சாசனம் எழுதிக் கொடு!

No comments:

Post a Comment